Thursday, 10 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்து- தலைக்கவசம் அணியாமையால் நேர்ந்த கதி!

மோட்டார் சைக்கிள் விபத்து- தலைக்கவசம் அணியாமையால் நேர்ந்த கதி!

ஹொரணை, வகவத்த களுபஹன பாடசாலைக்கு அருகில் அதிக வேகமாகவும் தலைக்கவசம் இன்றியும் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

44 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீழ்ந்ததிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் கடந்த நாள் ஹொரணை நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு 2.00 மணியளவில் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

இரவு நேரத்தில் இந்த விபத்தைக் எவரும் பார்க்கவில்லை எனவும், காலையில் வீதியால் சென்ற நபர் ஒருவர் சம்பவத்தைப் பார்த்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் ஹொரணை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, செயலி (App) மூலம் பெறப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றில் வகவத்த பகுதிக்கு வந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு மற்றொரு நண்பரின் மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் அதிவேகமாகச் சென்றபோதே இந்த விபத்து நடந்துள்ளது.

அத்துடன் விபத்து நடந்த தருணத்தில் முன்னால் பயணித்த நபர் இந்த விபத்தைக் கண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் வெளிநடைந்துள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter