ஜப்பான் அரசின் நிதியுதவியின் கீழ் வழங்கப்பட்ட 07 புதிய மெட்ரோ பஸ்கள் இன்று (24) இலங்கையை வந்தடைந்துள்ளன.
பொது போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த நவீன பஸ்கள், பயணிகளுக்கு பாதுகாப்பானதும் வசதியானதுமான சேவையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவை இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், அதிக பயணிகள் பயன்படுத்தும் முக்கிய நகர்ப்புற மற்றும் தொலைதூர வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் பொது போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஜப்பான் அரசு தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.