பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (09) நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்த ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தங்களது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்க அரசாங்கம் இதுவரை தவறிவிட்டதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மளனத்தின் (FUTA) செயலாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.