வீரகெட்டிய, அக்ரஹெர பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (14) முற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காகத் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், தவறுதலாக இந்த இளைஞரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.