வவுனியா பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் முழுமையான இரத்தப் பரிசோதனைக்கு (FBC) நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிகத் தொகை வசூலித்த காரணத்தால் 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது முழுமையான இரத்தப் பரிசோதனைக்குக் கட்டுப்பாட்டு விலையை விட அதிகத் தொகை வசூலிக்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த தனியார் வைத்தியசாலைக்கு எதிராக வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தனியார் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.