Wednesday, 29 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

கடல் அட்டைகளுடன் கைதான நபர்கள்!!

கடல் அட்டைகளுடன் கைதான நபர்கள்!!

கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார், சவுத்பார் கடற்கரை மற்றும் தரைப்பகுதியை உள்ளடக்கிய வகையில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட ‘இலங்கை கடற்படை கப்பல் கஜபா’ நிறுவனத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான மூன்று டிங்கி படகுகளும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியினூடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மற்றும் எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி தரை வழியினூடாக கொண்டு செல்லப்பட்ட 14,072 கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள், 03 டிங்கி படகுகள் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்கள் இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மன்னார் பகுதியைச் சேர்ந்த 24 முதல் 46 வயதிற்குட்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கடல் அட்டைகள், டிங்கி படகுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter