Friday, 24 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

இலங்கையில் ‘எல் நினோ’ தாக்கம்!

இலங்கையில் ‘எல் நினோ’ தாக்கம்!

இலங்கையில் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றமானது முன்கூட்டியே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுற்றாடல் துறை அமைச்சர் கலாநிதி தம்மிக பட்டபெந்தி எச்சரித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எல் நினோ’வின் உச்சகட்ட தாக்கம் நவம்பர் மாதமளவில் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இலங்கையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும், அதனைத் தொடர்ந்து ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரையான காலப்பகுதியில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தக் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்களுக்குத் திறம்பட முகங்கொடுக்கும் வகையில், அரச நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கலாநிதி பட்டபெந்தி குறிப்பிட்டார்.

‘எல் நினோ’ என்பது ஒரு உலகளாவிய மோசமான காலநிலை தாக்கமாகும் எனவும், அதன் தாக்கங்கள் இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பகிர்க: Facebook Twitter