Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

நூதனமான முறையில் போதைப்பொருள் வியாபாரம்- யாழில் சம்பவம்!

நூதனமான முறையில் போதைப்பொருள் வியாபாரம்- யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் பகுதியில் மிக நூதனமான முறையில் போதைப்பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

இணைய சேவையின் ஊடாக பொதிகள் விநியோகிக்கப்படுவதாக கூறி போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொதி விநியோக சேவையின் ஊடாக கொழும்பில் இருந்து பொதிசெய்யப்பட்டு, யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருக்கும் தபால் நிலையம் ஒன்றுக்கு கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தினர்.

அதில் 1800 போதை மாத்திரைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த போதை மாத்திரைகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பகிர்க: Facebook Twitter