மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகாரப் பிரதேசங்களுக்கு இன்று (27) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று (27) பி.ப 07.00 மணி முதல் மறுநாள் (28) மு.ப 07.00 மணி வரை நீர் விநியோகம் இவ்வாறு நிறுத்தப்படவுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய நீர்குழாய் மாற்றி அமைக்கும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.