இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான விற்பனை கடைகளை 2 வாரத்திற்குள் மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மது விற்பனை மூலம் ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள போதிலும் இதனால் பல குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனை அடிப்படையாக கொண்டே மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.