Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

மாவட்ட ரீதியிலேயே இம்முறை மே தின நிகழ்வுகள்!

மாவட்ட ரீதியிலேயே இம்முறை மே தின நிகழ்வுகள்!

இம்முறை மே தின நிகழ்வுகள் அனைத்தும் மாவட்ட ரீதியிலேயே நடாத்தப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் பிரதி அமைச்சருமான ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடத்தும் பிரமாண்டமான பிரதான மே தினப் பேரணி இம்முறை இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமைகளையும், எரிசக்தி தட்டுப்பாடு உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்களையும் கருத்திற்கொண்டு பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டங்களை உள்ளடக்கியதாக 21 மே தினப் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கட்சி ஆதரவாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை அந்தந்தப் பகுதிகளிலேயே ஒருங்கிணைப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.

கட்சியின் அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதற்கும் இந்த புதிய நடைமுறை பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பகிர்க: Facebook Twitter