Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

பெருமளவிலான வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் கைது!

பெருமளவிலான வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் கைது!

வீரக்கெட்டிய, கசாகல அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் பெருமளவிலான வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வனமுல்கிரிகல பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கல்ல பகுதியில் இருந்து வந்த கெப் ரக வாகனத்தை பொலிஸார் சோதனையிட்ட வேளையில், அதன் பின்புறத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது 14 கிலோகிராம் வெடிமருந்து, 240 ஜெலட்டின் குச்சிகள், 350 கிலோகிராம் அமோனியா, 490 டெட்டனேட்டர்கள், 5600 அடி நீளமான வெடிமருந்து நூல் என்பன மீட்கப்பட்டுள்ளன.

முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, இந்த வெடிபொருட்கள் கல் உடைக்கும் பணிகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வீரக்கெட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter