Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
Uncategorized

அமெரிக்க புலனாய்வு பிரிவின் பிரதானி இராஜினாமா!

அமெரிக்க புலனாய்வு பிரிவின் பிரதானி இராஜினாமா!

அமெரிக்க புலனாய்வு பிரிவின் பிரதானி துல்சி கப்பார்ட் (Tulsi Gabbard) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது கணவரின் நோய் நிலைமை காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அறிவித்துள்ளார்.

“எனது பதினொரு வருட திருமண வாழ்க்கையில் ஆபிரகாம் எனது பாறை போன்ற பலமாக இருந்தார். எனது தொழிலுக்கும் தற்போதைய பதவியின் பொறுப்புகளுக்கும் அவர் அளித்த ஆதரவு அளப்பரியது.

ஆபிரகாமுக்கு அரிய வகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இந்த சவாலான தருணத்தில் நான் அவருடன் இருக்க வேண்டும். எனவே, ஜூன் 30ஆம் திகதி முதல் எனது இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள்” என துல்சி தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்க: Facebook Twitter