Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

அதிகரிக்கப்பட்டுள்ள பால் தேநீரின் விலை!

அதிகரிக்கப்பட்டுள்ள பால் தேநீரின் விலை!

நேற்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஹர்சன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, 400 கிராம் பால்மா பெக்கெட்டின் விலை 50 ரூபாவினாலும், 1 கிலோகிராம் பால்மா பக்கெட்டின் விலை 125 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சந்தை நிலைமைகள் மற்றும் நாணய மாற்று வீத நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு பால்மா பெக்கெட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

எவ்வாறாயினும் அடுத்த வாரத்திற்குள் குறித்த புதிய விலைகளின் கீழ் சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பால்மாக்கள் விநியோகிக்கப்படும் என்றும், தற்போது சந்தையிலுள்ள எந்தவொரு இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலையும் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

பகிர்க: Facebook Twitter