Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

பாழடைந்த வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

பாழடைந்த வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

கொலொன்ன, வைத்தியசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்திருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொலொன்ன பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தின் தலைப் பகுதிக்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்படுவதுடன், காலில் வெட்டுக்காயம் என சந்தேகிக்கப்படும் காயம் ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மரணமடைந்தவர் தனது மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளதுடன், கடந்த மே 18ஆம் திகதி மாலை தனது சகோதரியின் வீட்டிலிருந்து இந்த பாழடைந்த வீட்டிற்கு வந்துள்ளார்.

அவர் பெரும்பாலான சமயங்களில் இந்த வீட்டிலேயே தங்கியிருந்தமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொலொன்ன பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter