ஹொரணை – கொழும்பு பிரதான வீதியின் கும்புக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருளைப் பெற்றுக்கொண்டு டிப்பர் வாகனம் மீண்டும் வீதிக்கு நுழைந்த போது, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.