இரும்புத் தடியால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் எம்பிலிபிட்டிய, கொடிகந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொடிகந்த, எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கும் மேலும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதன் காரணமாக, இரும்புத் தடியால் தாக்கி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.