Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்!!

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்!!

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுல பின்னலந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி ஜூலை மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 19,592 தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அறுவடை செய்யப்படும் பிரதேசங்களுக்கு ஏற்ப களஞ்சியசாலைகள் எதிர்காலத்தில் திறக்கப்படும் எனவும், தற்போது 100க்கும் மேற்பட்ட களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை பொலன்னறுவையில் உள்ள அனைத்துக் களஞ்சியசாலையும் திறக்கப்படவில்லை எனவும், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானவையே திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அறுவடை ஆரம்பமானவுடன் இந்தப் பகுதிகளில் உள்ள களஞ்சியசாலைகளை திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பகிர்க: Facebook Twitter