தும்பகல்ல, குடாஓய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மேலும் சிலருடன் இங்கினியாகல வெவவில் மீன்பிடிக்கச் சென்று திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே, இவ்வாறு காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தும்பகல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.