மொரவெவ, யாய 06 பகுதியில் பயிர் நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மொரவெவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரே இந்த மின்சாரக் கம்பிகளைப் பொருத்தியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.