இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது இருதரப்பினருக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இருதரப்பு பரஸ்பர அக்கறை கொண்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இருவரும் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.