எரிபொருள் விநியோகத்தின் போது QR குறியீட்டைப் பயன்படுத்துவதை நீக்குவது தொடர்பில் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவிக்கையில்,
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த வேகத்திற்கு இணையாக விலை குறையவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு எந்தவித தடைகளும் இல்லை எனவும் டி. ஜே. ராஜகருணா தெரிவித்திரியுந்தமை குறிப்பிடத்தக்கது.