கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வைத்து போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அவர்களிடம் இருந்து 600,000 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் கைதானவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.