Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

சிலாபம் முகத்துவாரப் பகுதியில் மீனவர் ஒருவர் மாயம்!

சிலாபம் முகத்துவாரப் பகுதியில் மீனவர் ஒருவர் மாயம்!

சிலாபம் முகத்துவாரப் பகுதியில் கடலில் பயணித்த படகொன்று இன்று (20) அதிகாலை விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

சிலாபத்தைச் சேர்ந்த 67 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

“ரஷ்மிக புத்தா” என பெயரிடப்பட்ட படகில் இரண்டு மீனவர்கள் சென்றிருந்த வேளையில், காலை 6.00 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து மீனவர்களில் ஒருவர் மீட்கப்பட்டதுடன், பின்னர் சிலாபம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த இரு மீனவர்களும் நேற்றைய தினம் (19) பிற்பகல் 1.00 மணி அளவில் சிலாபம் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன மீனவரைக் கண்டுபிடிக்கும் நோக்கில் தற்போது பல மீன்பிடிப் படகுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

எச்சரிக்கைகள் அமுலில் உள்ள காலப்பகுதியில் மீனவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

பகிர்க: Facebook Twitter