மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதிப் பணிப்பாளர் ரி. என். சூரியராஜா நேற்று (10) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
குறித்த கடமையேற்பு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீப் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே.திலீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.