குடியேற்ற மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் செயலிழப்புக்கு உள்ளான கணினி அமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மஹேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.
குடியேற்ற மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் இன்று (11) முற்பகல் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.