மன்னார், வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (07) காலை இடம்பெற்றுள்ளது.
நேற்று காலை கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள், கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்ட சடலம் குறித்து வங்காலை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து விரைந்து சென்ற பொலிஸார் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், இதுவரை எவராலும் அடையாளம் காணப்படவில்லை.
இறந்தவர் இந்திய மீனவரா அல்லது தொழிலுக்குச் சென்று காணாமல் போன உள்ளூர் மீனவரா என்பது குறித்தும் இதுவரை தகவல்கள் எதுவுமில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வங்காலை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.