இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகு ஒன்று நேற்று இரவு சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளானது.
அனர்த்தத்திற்குள்ளான படகில் 11 இந்திய மீனவர்கள் இருந்த நிலையில் அவர்களை மீட்கும் பணிகளை கடற்படை ஆரம்பித்துள்ளது.
குறித்த மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான பணிகளில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.