Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லைமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லைமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது!

தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்புக்குள் எல்லைமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இரணைதீவிற்கு தெற்கே உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 50 க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது ஒரு இந்திய மீன்பிடிப் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த 9 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடி திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பகிர்க: Facebook Twitter