உலக கிண்ண காற்பாந்தாட்ட தொடரில் ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது, அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி உலகக் கிண்ணத் தொடர்களில் தனது 17ஆவது கோலை பதிவு செய்ததன் மூலம், ஆண்களுக்கான உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்ததுடன், ஜெர்மனி அணியின் முன்கள வீரர் மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
2026ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் தனது நான்காவது கோலை அடித்ததன் மூலம், அர்ஜென்டினா அணியின் தலைவர் மெஸ்ஸி, பிரேசில் அணியின் புகழ்பெற்ற வீராங்கனை மார்டாவின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.
மகளிருக்கான உலகக் கிண்ணத் தொடர்களில் மார்டா அடித்த 17 இலக்குகளே ஒட்டுமொத்த உலகக் கிண்ண வரலாற்றின் சாதனையாக நிலைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.