இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன் முள்ளிவாய்க்காலில் யுத்தத்தினால் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பொது நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாடகர் சத்தியன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களையும், இடங்களையும் பார்வையிட்டார்.
இதன்போதே யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்தி செலுத்தியிருந்தார்.