Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

யாழ். செம்மணி மனித புதைகுழி அகழ்வு- புதிதாக 7 எலும்புக்கூடுகள் அடையாளம்!

யாழ். செம்மணி மனித புதைகுழி அகழ்வு- புதிதாக 7 எலும்புக்கூடுகள் அடையாளம்!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்றையதினம் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 5 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் புதிதாக 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 28ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றையதினம் (18) நடைபெற்றது.

இதன்போது சான்று பொருட்களாக சிறு பாசிமணி துண்டு, கை வளையல், ஆணிகள் பிளாஸ்ரிக் என்பவை மீட்கப்பட்டுள்ளன.

அதவேளை பாரிய உலோக துண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதற்குள் எலும்புக்கூடுகள் காணப்படுவதனால், அதனை பக்குவமாக சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 387 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 367 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

பகிர்க: Facebook Twitter