யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகாடமியில் இணைந்தது தொடர்பான விசாரணை ஒன்றுக்காக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்திருந்த அறிவித்தலுக்கு அமைய அவர் அந்த ஆணைக்குழுவில் இன்று (17) காலை முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைதான யோஷித ராஜபக்ஷவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.