Thursday, 23 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை!

மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை!

மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

மாகாண எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்று அதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியதன் பின்னரே தேர்தல் தினம் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்க முடியும்.

தற்போதுள்ள மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகள் காரணமாகவே தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சட்டத்தை மாற்றி புதிய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதா? அல்லது அதில் திருத்தம் செய்து பழைய முறைமையிலேயே தேர்தலை நடத்துவதா? என்பது குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்றின் ஊடாக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்க முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பகிர்க: Facebook Twitter