Thursday, 23 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

சுரேஷ் சலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என பரிசோதிக்க 5 பேர் கொண்ட மருத்துவ குழு நியமனம்!

சுரேஷ் சலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என பரிசோதிக்க 5 பேர் கொண்ட மருத்துவ குழு நியமனம்!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே, தடுப்பு காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா எனப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 5 பேர் கொண்ட விசேட மனநல தடயவியல் மருத்துவ குழுமமொன்றை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நியமித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேனவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மருத்துவ பரிசோதனையை தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த மருத்துவ அறிக்கையை அடுத்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிவானின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter