Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் 129 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிலிப்பைன்ஸில் இன்று (8) காலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.

இந்த நிலநடுக்கம் 10 கி.மீ கடல் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜேர்மனிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் அண்டை நாடான இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

பின்னர் இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டது.

அதேநேரம் நிலநடுக்கத்தில் பல கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிர்க: Facebook Twitter