Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்தை செலுத்திய நபர் ஒருவர் கைது!

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்தை செலுத்திய நபர் ஒருவர் கைது!

ஹட்டன் – டிக்கோயா சலங்கந்த பகுதியிலிருந்து நபர் ஒருவர் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபர் ஹட்டன் – டிக்கோயா சலங்கந்த பகுதியிலிருந்து தினமும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்தை செலுத்தி வந்து, பின்னர் பயணித்தின் இடையில் மற்றொரு சாரதிக்கு பேருந்தை ஒப்படைப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனடிப்படையில் ஹட்டன் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த பேருந்து ஹட்டன் – சலங்கந்த வழியாக அதிக ஆபத்தான செங்குத்து மற்றும் வளைவுகள் கொண்ட பாதையில் பயணிக்கின்றது.

இதனால் பயணிகளின் பாதுகாப்பு கருதி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகிர்க: Facebook Twitter