Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

நாட்டுக்குள் சட்டவிரோத சிகரெட்டுகளை கொண்டு வந்த 18 பேர் கைது!

நாட்டுக்குள் சட்டவிரோத சிகரெட்டுகளை கொண்டு வந்த 18 பேர் கைது!

நாட்டுக்குள் சட்டவிரோத சிகரெட்டுகளை கொண்டு வந்த 18 சீன மற்றும் இலங்கை பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாய் மற்றும் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இன்று (30) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த குறித்த சந்தேகநபர்கள், பசுமை வழிப்பாதை ஊடாக சிகரெட்டுகளைக் கொண்டு செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 16 சீனப் பிரஜைகளும் இரண்டு இலங்கை பிரஜைகளும் அடங்குவதோடு, இவர்கள் அனைவரும் வர்த்தகர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்களிடம் இருந்த 27 பயணப் பொதிகளை சோதனையிட்டதில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 209,200 சிகரெட்டுகள் அடங்கிய 1,046 பெட்டிகள், விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுமதி 31,380,000 ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter