Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

வட மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு 134 கெப் ரக வாகனங்கள்- இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பு!

வட மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு 134 கெப் ரக வாகனங்கள்- இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பு!

இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ், இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவை வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதுடன், இந்த கெப் ரக வாகனங்கள் வட மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

எதிர்காலத்திலும் இலங்கைக்கு இவ்வாறான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன்போது குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கம் மேற்கொண்ட இந்த அன்பளிப்பைப் பாராட்டி, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

பகிர்க: Facebook Twitter