Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

தமிழக முதலமைச்சர் கச்சத்தீவு குறித்து வெளியிட்ட கருத்து நாட்டின் இறையாண்மைக்கு சவால்- இந்துராகாரே தேரர் எச்சரிக்கை!

தமிழக முதலமைச்சர் கச்சத்தீவு குறித்து வெளியிட்ட கருத்து நாட்டின் இறையாண்மைக்கு சவால்- இந்துராகாரே தேரர் எச்சரிக்கை!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கச்சத்தீவு குறித்து வெளியிட்ட கருத்து, இலங்கையின் இராணுவத்தினர் தமது உயிரைத் தியாகம் செய்து பாதுகாத்த நாட்டின் இறையாண்மைக்கு பாரிய சவாலாகவும், ஒரு உணர்வுப்பூர்வமான பிரச்சினையாகவும் மாறப்போவது உறுதி என பேராசிரியர் இந்துராகாரே தேரர் எச்சரித்துள்ளார்.

மகாபிரிவெனாவில் நடைபெற்ற போர் வீரர்களை நினைவுகூரும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கச்சத்தீவை மீட்பேன் என்று கூறியபோது, யாழ்ப்பாணத்தில் உள்ள சில குழுக்கள் அதற்கு ஆதரவாகக் கோஷமிட்டுக் கொண்டாடினர்.

நாடாளுமன்றத்தில் உள்ள அவரது ஆதரவாளர்களும் இதற்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

ஆனால் எமது தலைவர்கள் கச்சத்தீவுக்குச் சென்று பார்வையிட்டு விட்டு, அங்கு பெற்றுக் கொள்வதற்கு எதுவும் இல்லை’ எனக் கூறியிருந்தனர்.

அதனைக் கொடுத்தாலும் பரவாயில்லை’ என்ற ரீதியிலேயே அடுத்தகட்ட நகர்வுகள் அமையப் போவது போல் தோன்றுகிறது.

இன்று நாடாளுமன்றத்தில் இருந்து கொண்டு விஜய்யின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த வட மாகாணத்தையுமே பெற்றுக் கொள்ளுமாறு கோரி வருகின்றனர்.

இந்த அரசியல் கொள்கை மற்றும் நகர்வானது, எதிர்காலத்தில் எமது நாட்டின் இராணுவத்தினர் தமது உயிரைத் தியாகம் செய்து பாதுகாத்த நாட்டின் இறையாண்மைக்கு பாரிய சவாலாகவும், ஒரு உணர்வுப்பூர்வமான பிரச்சினையாகவும் மாறப்போவது உறுதி என பேராசிரியர் இந்துராகாரே தேரர் தனது உரையில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter