முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்று (18) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உயிரிழந்தோரின் உறவினர்களால் இன்று நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு மக்கள் தமது உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் யுத்தத்தினால் உயிரிழந்தோரின் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மத குருமார்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.