பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (11) பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு வருகை தந்துள்ளார்.
7ஆவது உயிர்த்த ஞாயிறு தின நினைவேந்தலின் போது அவர் வெளியிட்ட கருத்து தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.