Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

கம்பன் விழாவில் கௌரவிக்கப்பட்ட ஜனாதிபதி!

கம்பன் விழாவில் கௌரவிக்கப்பட்ட ஜனாதிபதி!

தமிழ் மக்களின் முக்கிய கலாசார மற்றும் இலக்கிய விழாவான “கம்பன் விழாவானது” வெள்ளவத்தை ராமகிருஷ்ணா மண்டபத்தில் நேற்று (03) பிற்பகல் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்றார்.

சிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவரான கம்பரின் பெயரில் அகில இலங்கை கம்பன் கழகம் 1980ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது.

இங்கு கருத்துரைத்த ஜனாதிபதி இலக்கியம், நடனம் மற்றும் இசை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, இளைய தலைமுறையினரை கலாசார விழுமியங்கள் மற்றும் தேசப்பற்றுடன் கூடிய தர்மத்தின் வழியில் வழிநடத்துவதற்கு கம்பன் கழகம் ஆற்றிவரும் சேவையை பாராட்டினார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதிக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter